ஈரோடு மாவட்டத்தில் நாளை 277 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-01 14:15 GMT

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) 277 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் 39 மையங்களில் 7 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

Tags:    

Similar News