பவானி சட்டமன்ற தொகுதியில் 100 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Vaccine News India - பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 100 மையங்களில் (ஜூலை24) நாளை 32-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது

Update: 2022-07-23 05:30 GMT

பவானி வட்டாட்சியர் அலுவலகம் .

Vaccine News India - கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தமிழகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 32-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக பவானி சட்டமன்றத் தொகுதியில் பவானி வட்டாரத்தில் 66 மையங்கள், அம்மாபேட்டை வட்டாரத்தில் 34 மையங்கள் என 100 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்ட‌ உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில், 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசி, இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்கள், முதியோர், முன் களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என  பவானி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News