ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 27 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 107 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

Update: 2022-02-23 23:30 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம்,  2 ஆயிரத்து 462 பேருக்கு பரிசோதனை செய்ததில் 30 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில், நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 508 ஆக உயர்ந்தது.

மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 107 பேர் குணமடைந்து, நேற்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 89 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 685 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News