ஈரோடு மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று பூஜ்ஜியம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 2 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-03-20 13:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லை. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 734 ஆக உள்ளது. மேலும் இன்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை ஈரோடு மாவட்டத்தில் 1,31,918 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,32,665 ஆக உயர்வு. மாவட்டத்தில் 13 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News