ஈரோட்டில் புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இரண்டாக ஆக உள்ளது.

Update: 2022-04-21 00:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி  ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில்,  மாவட்டத்தில் நேற்று, மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து,  மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 669 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 933 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 734 பேர் இறந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News