ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,229 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,229 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-01-25 15:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 783 பேருக்கு பரிசோதனை செய்ததில் 1,199 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில்,  சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி இன்று புதிதாக 1,229 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 833 ஆக உயர்ந்தது.

மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 742  பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 779 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலி ஆனவர்களின் எண்ணிக்கை 722 ஆக உள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ள 7 ஆயிரத்து 332 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News