ஈரோடு மாவட்டத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 67 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;
பைல் படம்.
கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 67 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார். மாவட்டத்தில் நேற்று 7 ஆயிரத்து 415 பேருக்கு பரிசோதனை செய்ததில் 83 பேரும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பரிசோதனை விகிதம் 1.1% ஆகும்.
மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை -1,03,762
இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,02,201
தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை - 880
மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு - 681