ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 7 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-03-12 14:00 GMT

கோப்பு படம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று வேறும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,658 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 7 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்காரணமாக கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 1,31,892 பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் மொத்தம் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 734 பேர் பலியாகி உள்ளனர்.

Tags:    

Similar News