பவானி அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சாலையோர மரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவன் உயிரிழந்தார்

Update: 2022-03-13 15:30 GMT

சாலை விபத்தில் உயிரிழந்த பாலமுருகன்

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த குருப்பநாயக்கன்பாளையம், நேதாஜி நகரைச் சேர்ந்தவர் தனபால் மகன் பாலமுருகன் ( 17). சித்தோடு அருகேயுல்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் இவர், சனிக்கிழமை இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது தனது சகோதரனின் இரு சக்கர வாகனத்தை எடுத்து ஓட்டிச் சென்றார்.

அப்போது, பவானி - மேட்டூர் சாலையில் அதிவேகமாகச் சென்றபோது கட்டுப்பாட்டி இழந்த இரு சக்கர வாகனம், ஜல்லிக்கல்மேடு அருகே சாலையோர மரத்தில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த பாலமுருகன், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, பவானி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News