சாலை விபத்தில் சிகிச்சை பெற்ற அந்தியூர் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-03-13 12:30 GMT

பைல் படம் 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் உள்ள கரட்டுப்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமியின்இளைய மகன் விக்னேஷ்.கோவையில் உள்ள கல்லூரியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், விக்னேஷூம், அவருடைய நண்பர் முஹம்மது ரிஸ்வானும் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, கோவை- பொள்ளாச்சி சாலையில் சிப்கோ மேம்பாலம் அருகே டெம்போ மோதி விக்னேஷ் படுகாயம் அடைந்தார்.இதனையடுத்து, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து கடந்த மாதம் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் அவரது பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.இந்நிலையில், விக்னேஷின் உடல்நிலை மோசமானதால் இன்று அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.இதுகுறித்து, பழனிச்சாமி அளித்த புகாரில் பேரில் அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் விக்னேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News