கோபிசெட்டிபாளையம் அருகே பைக் - மொபட் மோதலில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே பைக் - மொபட் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

Update: 2022-02-20 11:38 GMT

விபத்தில் பலியான ஸ்ரீதர்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த சிறுவலூர் வெள்ளாங்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பச்சியப்பன் மகன் ஸ்ரீதர் (வயது 22).இவர் சித்தோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு கவுந்தப்பாடி- சிறுவலூர் ரோட்டில் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது, இவரது பைக்கும் எதிரே சிறுவலூர் புளியங்காட்டூரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் ஓட்டி வந்த மொபட்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இவர்களில் ஸ்ரீதர் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.சுப்பிரமணியம் ( வயது 50) பலத்த காயங்களுடன் பெருந்துறை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News