மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை
மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி, விற்பனையை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி துவக்கி வைத்தார்.;
மகளிர் சுய உதவி குழு விற்பனை, கண்காட்சியை துவக்கி வைத்த கிருஷ்ணனுண்ணி.
ஈரோடு மாவட்டம், குமலன்குட்டை பெருந்துறை ரோட்டில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த கண்காட்சியானது, இன்று முதல் தொடங்கி வரும் ஜன.14-ம் தேதி வரை 15 நாட்கள் ஈரோடு-பெருந்துறை ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் (மகளிர் திட்ட அலுவலகம்) நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கெட்சி லீமா அமெலினி , உதவி திட்ட அலுவலர்கள் சாந்த , அன்பழகன் உட்பட மகளிர் சுய உதவிக் குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.