கோபிசெட்டிபாளையம் விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ரூ.1.63 லட்சத்துக்கு ஏலம்

கோபிசெட்டிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.63 லட்சத்துக்கு விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது.

Update: 2022-03-03 11:15 GMT

கோப்பு படம்

ஈரோடு மாவட்டம் கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரத்தை விட இன்று தேங்காய் பருப்பு கிலோவிற்கு 7 ரூபாய் அதிகரித்து உள்ளதாக ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோபி சத்தி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரம் தோறும் நடைபெறும் தேங்காய் பருப்பு ஏலத்தில் கோபி, கவுந்தப்பாடி, பங்களாபுதூர், டி.என்.பாளையம்,நம்பியூர், கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம் மற்றும் புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 100 கணக்கான விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த வாரம் ஒரு கிலோ 91 ரூபாய்க்கு விலை போன நிலையில் இன்று நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ஒன்று 98 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 89 ரூபாய்க்கும் சராசரியாக 97 ரூபாய்க்கும் விலை போனது. இன்று 44 மூட்டைகளில் 1 ஆயிரத்து 793 கிலோ தேங்காய் பருப்பு வரத்து இருந்த நிலையில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 757 ரூபாய்க்கு விலை போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News