பெருந்துறை பேரூராட்சியில் காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தம்

பெருந்துறை பேரூராட்சியில் சாலை விரிவாக்கப் பணி காரணமாக காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-12-02 10:45 GMT

பெருந்துறையில் நடைபெறும் சாலை விரிவாக்க பணி.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட ஈரோடு ரோடு, அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து பழைய பஸ் நிலையம் வரையிலும், மற்றும் புதிய பஸ் நிலைய பகுதியிலும், சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விரிவாக்கப் பணிகளால் அந்தப் பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களை மாற்று இடத்தில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடையும் வரை பெருந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி குடிநீர் வினியோகம் இருக்காது என பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News