பவானி நகராட்சியில் 132 பேரின் வேட்புமனு ஏற்பு

பவானி நகராட்சியில் வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்தது. 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

Update: 2022-02-05 13:45 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 28ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, நேற்று நிறைவு பெற்றது. நகர்மன்ற தேர்தலில் 27 வார்டுகளுக்கு 134 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 12வது வார்டு திமுக வேட்பாளர் மூன்று மனுக்களை அளித்திருந்தார். இந்நிலையில், இரண்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதையடுத்து, 132 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

Tags:    

Similar News