தேசிய நெடுஞ்சாலையின் நடுவே சண்டையிட்ட காட்டு யானைகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே காட்டு யானைகள் சண்டையிட்டதால் பரபரப்பு

Update: 2021-10-28 16:45 GMT

சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையில் சண்டையிட்ட  காட்டுயானைகள்

ஈரோடு மாவட்டம் ,சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே இரண்டு யானைகள் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் அருகே, நள்ளிரவில் வனப்பகுதிக்குள் இருந்து சாலைக்கு வந்த இரண்டு யானைகள் தனது குட்டியுடன் வாகனங்களை வழிமறித்து நின்றன. அப்போது 2 யானைகளும் தும்பிக்கையால் மோதி  சண்டையிட்டு கொண்டன.இதனை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்த நிலையில், சிறிது நேரத்தில் யானைகள் மீண்டும் வனப்பகுதிக்கு சென்றுவிட்டன.

Tags:    

Similar News