தாளவாடி மலைப்பகுதியில் வேளாண்மை துறை நலத்திட்ட உதவி வழங்கும் விழா

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2021-10-27 07:00 GMT

தாளவாடி மலைப்பகுதியில் , விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில், வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில்,  மலைப்பகுதி விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில்,   நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச்செயலாளருமான ராசா கலந்து கொண்டு,  பண்ணை மானியத் திட்டத்தின் கீழ்,  ஐந்து லட்சம் மதிப்புள்ள டிராக்டர் மானியம் வழங்கினர். அத்துடன், இடுபொருட்கள், சொட்டுநீர் பாசனக் கருவிகள், சின்ன வெங்காயம் நடவு செய்ய தேவையான விதை, உரம் போன்றவற்றை வழங்கினார்.

இந்நிகழச்சியில்,  வேளாண் துறை அதிகாரிகள் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News