தாளவாடி மலைப்பகுதியில் விவசாயியிடம் கொள்ளை

தாளவாடி அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

Update: 2021-11-07 13:00 GMT

தாளவாடியில் கொள்ளையடிக்கப்பட்ட விவசாயியின் வீடு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள பந்தனஹள்ளி பகுதியில் ஈரோட்டைச் சேர்ந்த சண்முகம், சத்தியம்மாள் என்ற வயதான தம்பதியினர் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு சண்முகம் மற்றும் அவரது மனைவி இருவரும் உறங்கிக் கொண்டிருக்கும்போது தோட்டத்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர் சண்முகத்திடம் கத்தியை காட்டி மிரட்டி சண்முகம் மற்றும் அவரது மனைவி இருவரின் கைகளை கட்டிவிட்டு வீட்டில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து இன்று காலை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி காவல்துறையினர் ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும்,  கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் இருவரை தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் வயதான தம்பதியினர் இதுவரை கட்டிப்போட்டு கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News