நாய் குறுக்கே ஓடியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி

புஞ்சை புளியம்பட்டி அருகே, மோட்டார் சைக்கிளில் சென்ற போது, நாய் குறுக்கே சென்றதில் தொழிலாளி கீழே விழுந்து பலியானார்.

Update: 2021-11-13 04:00 GMT

ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 40). மில் தொழிலாளி. இவருடைய நண்பர் செங்குந்த புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 44). கடந்த 3 நாட்களுக்கு முன்பு, 2 பேரும் மோட்டார்சைக்கிளில் புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து காவிலிபாளையத்துக்கு,  உறவினர் ஒருவர் இறந்த துக்கம் விசாரிக்க சென்றனர்.

துக்கம் விசாரித்து விட்டு திரும்பும் வழியில்,  புஞ்சைபுளியம்பட்டி அருகே கோப்பம்பாளையம் அருகே வந்தபோது, நாய் குறுக்கே ஓடியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும்,  கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக,  கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமார் இறந்தார். இதுகுறித்து,  புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News