சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.350க்கு விற்பனை

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.350க்கு விற்பனையானது.

Update: 2021-10-22 03:30 GMT
பைல் படம்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறும்.

அதன்படி நேற்று சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 3 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டுவந்தனர்.

இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.245-க்கும், முல்லை ரூ.180 க்கும், காக்கடா ரூ.125-க்கும், செண்டுமல்லி ரூ.56-க்கும், பட் டுப்பூ ரூ.110-க்கும், ஜாதிமல்லி ரூ.250-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும், சம்பங்கி ரூ.15-க்கும், அரளி ரூ.140-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.60-க்கும் விற்பனையானது.

Tags:    

Similar News