சத்தியமங்கலத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் நாளை (13-ந் தேதி) மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் (இளைஞர்களுக்கு) பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 13.11.2021 தேதியன்று காலை 9.00 முதல் மாலை 3.00 வரை சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் மத்திய, மாநில அரசின் DDU-GKY-திட்டத்தின் 100% வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. இதர விவரங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்கு அணுக வேண்டிய முகவரி: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத் திட்டம், (மகளிர் திட்டம்),முதல் தளம், பூமாலை வணிக வளாகம், குமலன் குட்டை, பெருந்துறை சாலை, ஈரோடு - 638 011. தொலைபேசி எண்: 0424 - 2257087 கைபேசி எண் : 94440 94277 இமெயில் முகவரி : dpiu_erod@yahoo.com ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லா (ஆண், பெண் இருபாலரும்) இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திகொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.