சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.525க்கு விற்பனை

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.525க்கும் முல்லை ரூ.240-க்கும் விற்பனையானது.

Update: 2021-10-24 04:00 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும்.  சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 30 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 2.5 டன் பூக்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள்.

இதில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.525-க்கும், முல்லை ரூ.240-க்கும், காக்கடா ரூ.200 க்கும், செண்டுமல்லி ரூ.38-க்கும், பட்டுப்பூ ரூ.45-க்கும், ஜாதி மல்லி ரூ.350-க்கும், சம்பங்கி ரூ.10-க்கும், அரளி ரூ.80-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.50-க்கும் விற்பனையானது.

Tags:    

Similar News