சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,417க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,417-க்கு விற்பனையானது.

Update: 2021-11-20 23:30 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும்.

அதன்படி நேற்று நடந்த ஏலத்திற்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 3 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,417-க்கும், முல்லை ரூ.700-க்கும், காக்கடா ரூ.775-க்கும், செண்டுமல்லி ரூ.120-க்கும், பட்டு பூ ரூ.81-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும், அரளி ரூ.350-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது. 

Tags:    

Similar News