சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,890-க்கு ஏலம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரே நாளில் கிலோ ஒன்று ரூ.578 உயர்ந்து ரூ.1,890-க்கு ஏலம் போனது.

Update: 2021-11-08 00:30 GMT

சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோடு மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல்,  மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 2½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

நேற்றைய ஏலத்தில், மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,890-க்கும், முல்லை ரூ.800-க்கும், காக்கடா ரூ.1000-க்கும், செண்டுமல்லி ரூ.67-க்கும், பட்டுப்பூ ரூ.130-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.550-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும் ஏலம் போயின.

Tags:    

Similar News