சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,312-க்கு விற்பனை

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,312-க்கு விற்பனை ஆகிறது.

Update: 2021-11-07 00:45 GMT

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை, பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு,  சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 3 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

இதில் மல்லிகை ஒரு கிலோ ரூ.1,312-க்கும், முல்லை ரூ.400-க்கும், காக்கடா ரூ.500-க்கும், செண்டுமல்லி ரூ.100-க்கும், பட்டுப்பூ ரூ.115-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போயின.

Tags:    

Similar News