சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விலை நிலவரம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

Update: 2021-10-28 23:45 GMT

மாதிரி படம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில்,  பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல். மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். வழக்கம்போல் மார்க்கெட்டில் நடைபெற்ற ஏலத்துக்கு,  சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள்,  3 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில், மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.420-க்கும், முல்லை ரூ.200-க்கும், காக்கடா ரூ.250-க்கும், செண்டுமல்லி ரூ.16-க்கும், பட்டுப்பூ ரூ.60-க்கும், ஜாதிமல்லி ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.10-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.70-க்கும் ஏலம் போயின.

Tags:    

Similar News