ஓடிய காரில் தீ விபத்து

திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-03-08 06:01 GMT

திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரைச் சேர்ந்தவர் ஜாய்சன் கிருபாகரன் இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க காரில் மனைவியுடன் சென்றுவிட்டு தனது சொந்த ஊரான திருப்பூருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அப்போது சத்தியமங்கலம் நேரு நகர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, பெட்ரோல் கசிவு காரணமாக கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. சுதாரித்துக்கொண்ட தம்பதியினர் காரை விட்டு கீழே இறங்கியுள்ளனர். கார் முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரியா தொடங்கியது. தீ எரிவதை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பற்றி எரியும் காரை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இதன்காரணமாக சத்தியமங்கலம் கோபி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News