திம்பம் மலைப்பகுதியில் தொடர் மழை - திடீரென தோன்றிய அருவி

திம்பம் மலைப்பகுதியில் தொடர் மழையால் திடீர் அருவி தோன்றின.

Update: 2021-11-25 13:00 GMT

திடீரென தோன்றிய அருவி. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று பெய்த கனமழையால், திம்பம் மலைப்பாதையில் பாறைகளும் இடையே,  தற்காலிக அருவிகள் தோன்றி நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனை அந்த வழியாக செல்லும் வாகன‌ ஓட்டிகள்,  வாகனத்தினை நிறுத்தி கண்டு ரசித்தனர். திடீரென தோன்றிய அருவியை தங்கள் போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர். 

Tags:    

Similar News