சத்தியமங்கலம் அருகே கார், பைக் நேருக்கு நேர் மோதி விபத்து

சத்தியமங்கலம் அருகே கார் மற்றும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.

Update: 2021-08-16 10:15 GMT

கார்-இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சிசிடிவி காட்சி.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்துள்ள இலங்கை தமிழர் குடியிருப்பை சேர்ந்தவர் குமார். இவர் பவானிசாகர் தொட்டம்பாளையம் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் தான் பணி புரியும் உணவகத்தை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தொட்டம்பாளையம் பாலம் அருகே வந்து  கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக, எதிரே வந்த நான்கு சக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பைக்கில் வந்த குமார் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் பலத்த காயமடைந்த குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அக்காட்சிகளை தற்போது வெளியிட்டுள்ளனர்.

Tags:    

Similar News