பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக சரிவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை (டிச.5) இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி 80.98 அடியாக சரிந்தது.

Update: 2023-12-05 07:00 GMT

கழுகுப் பார்வையில் பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை (டிச.5) இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி 80.98 அடியாக சரிந்தது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. 

செவ்வாய்க்கிழமை (டிச.5) இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 80.98 அடி ,

நீர் இருப்பு - 16.20 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 951 கன அடி ,

நீர் வெளியேற்றம் - 2,600 கன அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2,000 கன அடி நீரும், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்திற்காக 600 கன அடி நீரும் என மொத்தம் அணையில் இருந்து 2,600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News