அம்மாபேட்டை அருகே குடும்ப தகராறில் கணவர், மகன்கள் மாயம்

குடும்ப தகராறில் கணவர், மகன்கள் மாயமானது குறித்து மனைவி அளித்த புகாரில் பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;

Update: 2022-05-08 23:45 GMT
அம்மாபேட்டை அருகே குடும்ப தகராறில் கணவர், மகன்கள் மாயம்
  • whatsapp icon

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சென்ரெட்டிநகரை சேர்ந்தவர் சேகர் (33). இவரது மனைவி சரண்யா (29). இவர்களுக்கு பிரம்மதீஷ் (8) , முகுந்தன் (6) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். சேகருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால், சேகருக்கும் சரண்யாவிற்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று, இருவருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்படவே, சரண்யா வீட்டை விட்டு பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சேகர் மற்றும் இரண்டு மகன்களையும் காணவில்லை. பல இடங்களிலும் தேடி கிடைக்கவில்லை. இதுகுறித்து சரண்யா அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News