பவானிசாகர்: அரசு அலுவலர் பயிற்சி நிலையம் 100 சதவீதம் செயல்பட அனுமதி

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் 100 சதவீதம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-30 10:15 GMT

பவானி அரசு அலுவலர் பயிற்சி நிலையம்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு அலுவலர்கள்,  இளநிலை உதவியாளர், உதவியாளர் உள்ளிட்டோருக்கு துறை ரீதியிலான அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பயிற்சிகள் நிறுத்தப்பட்டன. பின்னர் அரசு அறிவித்த தளர்வால் 50 சதவீத ஊழியர்களுக்கு பயிற்சி வழங்க அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது 100 சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து அரசு செயலர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் முழு அளவான 685 பயிற்சியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கலாம். மேலும் மதிப்பூதியத்தில் 9 கூடுதல் விரிவுரையாளர்களை நியமித்து பயிற்சி வகுப்புகளை அதிகரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News