பெருந்தலையூர் அருகே பவானி ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர், உயிருடன் மீட்பு
Bhavani River - பெருந்தலையூர் அருகே பவானி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபரை, பவானி தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.;
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபரை, பவானி தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
Bhavani River - ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கவுந்தப்பாடி தர்மாபுரி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (46). இவர் நேற்று, செரயாம்பாளையத்தில் நடந்த உறவினரின் சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளிக்க இறங்கியபோது, எதிர்பாராத விதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்த தகவலின்பேரின், பவானி நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சென்று, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், சக்திவேலை உயிருடன் மீட்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2