அம்மாபேட்டை அருகே கட்டுமான பணியின் போது தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே கட்டுமான பணியின் போது முதல் தளத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.

Update: 2022-04-27 09:15 GMT

அம்மாபேட்டை காவல் நிலையம் பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி செல்லிகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி ஈஸ்வரி என்கிற ராஜேஸ்வரி (வயது 49).இவர் தனது ஊரைச் சேர்ந்த சிலருடன் செம்படாபாளையம் என்ற பகுதியில் சண்முகம் என்பவரது புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

அப்போது முதல், தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த ராஜேஸ்வரி எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து தலையில் அடிபட்டதால் உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து ராஜேஸ்வரியின் மகள் ரேவதி அளித்த  புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News