அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.6.25 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடைபெற்ற ஏலத்தில் ஆறு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.;
அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடைபெற்ற ஏலத்தில் ஆறு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 33 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 38 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 650 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 600 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 470 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்று 490 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 150 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 3,500 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஆறு லட்சத்து 24 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.