கோபிசெட்டிபாளையம் வருவாய் வட்டாட்சியராக ஆசியா பொறுப்பேற்பு

கோபிசெட்டிபாளையம் வருவாய் வட்டாட்சியராக ஆசியா பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2022-05-22 10:15 GMT

கோபி வட்டாட்சியராக ஆசியா பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியராக பணியாற்றி வந்த தியாகராஜ் கோபி கோட்ட கலால் அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, கொடுமுடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட  வட்டாட்சியராக பணியாற்றி வந்த ஆசியா கோபி செட்டிபாளையம் வட்டாட்சியராக மாற்றப்பட்டார். 

இதனையடுத்து, கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியராக ஆசியா பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் தியாகராஜ் பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆசியாவிற்கு வட்டார வட்டாட்சியர் அலுவலர்கள்,  பணியாளர்கள் , துணை வட்டாட்சியர், மண்டல வட்டாட்சியர்கள் , வருவாய் அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News