ஆப்பக்கூடல் அருகே விஜயகாலனியில் அடையாளம் தெரியாத வாலிபர் உடல் மீட்பு
விஜயகாலனியில் புதரில் கிடந்த, அடையாளம் தெரியாத வாலிபர் உடலை மீட்டு, ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.;
ஆப்பக்கூடல் அருகே புதரில் அடையாளம் தெரியாத வாலிபர் உடல் மீட்பு.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ளது விஜயகாலனி. இங்குள்ள மாலா கோவில் அருகே உள்ள புதரில், ஒருவர் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் கொடுத்த புகாரின்படி, சம்பவ இடத்திற்கு வந்த ஆப்பக்கூடல் போலீசார், இறந்து கிடந்த வாலிபரின் உடலைக் கைப்பற்றி, பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபருக்கு, 30ல் இருந்து 35 வயதிருக்கும். அவர் ஆரஞ்சு கலர் டி-சர்ட் அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என, போலீசார் விசாரிக்கின்றனர்.