ஆம்புலன்ஸில் பிரசவம்:பெண் குழந்தை பிறந்தது

பர்கூர் மலைப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் கூலித் தொழிலாளிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

Update: 2021-01-24 12:36 GMT

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட தாமரைக்கரை அருகே உள்ள சின்ன செங்குளம் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கெஞ்சன். இவரது மனைவி ரோஜா. நிறைமாத கர்ப்பிணியான ரோஜாவுக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது கணவர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ரோஜாவை அழைத்துக் கொண்டு மலைப்பாதை வழியாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனர். ஒன்னகரை என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்த போது ரோஜாவிற்கு பிரசவ வலி அதிகரித்தது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் சிவா பிரசவம் பார்த்ததில் ரோஜாவிற்கு ஆம்புலன்ஸிலேயே அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து தாயும் சேயும் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பூரண நலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News