அந்தியூர் அருகே கஞ்சா செடி பயிரிட்டவர் கைது

7 அடி உயரத்தில் கஞ்சா செடி வளர்ப்பு, வீட்டில் ஒரு அட்டைப்பெட்டியில் கஞ்சா இலைகள் வைத்திருப்பதை கண்டுபிடித்த போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-01-01 09:48 GMT

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலை தம்புரட்டி கிராமத்தை சேர்ந்தவர் சித்தலிங்கம் (வயது 46) இவருக்கு சொந்தமாக 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவரது விவசாய தோட்டத்தில் கஞ்சா செடி உள்ளதாக பர்கூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அங்கு சென்ற பர்கூர் போலீசார் தோட்டத்தை சோதனையிட்டதில் 7 அடி உயரத்தில் கஞ்சா செடி இருந்ததை கண்டுள்ளனர். பின்னர் வீட்டை சோதனை செய்ததில் வீட்டில் ஒரு அட்டைப்பெட்டியில் கஞ்சா இலைகளை உலர வைத்திருப்பது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சித்தலிங்கத்தை கைது செய்து வழக்கு பதிவு செய்த போலீசார் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Tags:    

Similar News