கவுந்தப்பாடி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

கவுந்தப்பாடி அருகே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை.

Update: 2021-12-12 09:30 GMT

கவுந்தபாடி அருகே உள்ள சின்னபுலியூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 70).இவர் கடந்த 2 வருடமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது மன வேதனை தாங்க முடியாமல் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்‌.

இதனையடுத்து, அவரது உறவினர்கள் பழனிச்சாமி மீட்டு சிகிச்சைக்காக, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி உயிரிழந்தார்.  இதுகுறித்து, கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News