அந்தியூர் விற்பனைக்கூடத்தில் ரூ.7.86 லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.7.86 லட்சத்துக்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.;

Update: 2022-01-31 11:30 GMT
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் (பைல் படம்)

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து விவசாயிகள்  6616 தேங்காய்கள் கொண்டு வந்தனர்.

இதில், குறைந்த விலையாக 5 ரூபாய் 01 பைசாவிற்கும், அதிக விலையாக 16 ரூபாய் 71 பைசாவிற்கும், 35 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 85 ரூபாய் 09 பைசா முதல் 89 ரூபாய் 89 பைசா வரையிலும், இரண்டு மூட்டை எள் கிலோ 108 ரூபாய் 69 பைசாவிற்கும், 83 மூட்டைகள் துவரை கிலோ 65 ரூபாய் 89 பைசாவிற்கும், 11 மூட்டை பாசிப்பயறு கிலோ 91 ரூபாய் 95 பைசாவிற்கும் ஏலம் போயின.

மேலும்,  2 மூட்டை தட்டைபயிறு கிலோ 73 ரூபாய் 69 பைசாவிற்கும், 8 மூட்டை உளுந்து கிலோ 66 ரூபாய் 20 பைசாவிற்கும், 10 மூட்டை நரிப்பயிறு கிலோ 82 ரூபாய் 29 பைசாவிற்கும் விற்பனையாகின.  மொத்தம் 149 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள்,  7 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாகவும், 120 விவசாயிகள் பங்கேற்றதாகவும் விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags:    

Similar News