ஈரோட்டில் பெண்களுக்கான செயற்கை நகை தயாரிப்பு குறித்த இலவசப் பயிற்சி: வரும் ஏப்.21ம் தேதி தொடங்குகிறது!
ஈரோட்டில் பெண்களுக்கான செயற்கை நகை தயாரிப்பு குறித்த இலவசப் பயிற்சி வகுப்பு வரும் ஏப்ரல் 21ம் தேதி தொடங்குகிறது.;
ஈரோட்டில் பெண்களுக்கான செயற்கை நகை தயாரிப்பு குறித்த இலவசப் பயிற்சி வகுப்பு வரும் ஏப்ரல் 21ம் தேதி தொடங்குகிறது.
இதுதொடர்பாக கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு அடுத்த சித்தோடு வாசவி கல்லூரி அருகே அரசினர் பொறியியல் கல்லூரி சாலையில், கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்களுக்கான செயற்கை நகை தயாரிப்பு குறித்து இலவசப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியானது, வருகிற ஏப்ரல் மாதம் 21ம் தேதி முதல் தொடங்கி மே மாதம் 7ம் தேதி வரை 14 நாட்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியின் போது சீருடை உணவு இலவசமாக அளிக்கப்படும்.
இப்பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், 100 நாள் வேலை திட்டத்தில் இருப்போர், அவர்களது குடும்பத்தாருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு, 0424-2400338, 87783 23213, 72006 50604 என்ற எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.