அந்தியூர் அருகே தண்ணீர் குடித்த குழந்தை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பூச்சிக் கொல்லி மருந்து டப்பாவில் தண்ணீர் பிடித்து குடித்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-07-05 09:30 GMT

பைல் படம்.

அந்தியூர் அருகே பூச்சிக் கொல்லி மருந்து டப்பாவில் தண்ணீர் பிடித்து குடித்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அப்பாஸ் (29). வெல்டர். இவரது மனைவி சிம்ரான் (28). இவர் அதே பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் சிறுவன் சையத் அத்னான் (3).

இந்நிலையில், தாய் சிம்ரான் வேலைக்கு செல்லும்போது குழந்தை சையத் அத்னானையும் உடன் அழைத்து செல்வது வழக்கம். கடந்த 2ம் தேதி வேலைக்கு' சென்றபோது, அங்கிருந்த தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த சையத் அத்னான் தோட்டத்தில் கிடந்த பூச்சிக் கொல்லி மருந்து டப்பாவில் தண்ணீர் பிடித்து குடித்துவிட்டான்.

சிறிது நேரத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட குழந்தையை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சையத் அத்னான், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தான். இதுகுறித்து, அந்தியூர் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News