ஈரோட்டில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 3 வயது குழந்தை பலி
ஈரோட்டில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 3 வயது குழந்தை பலியானது.;
ஈரோட்டில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 3 வயது குழந்தை பலியானது.
பீகார் மாநிலம் மோதிஹாரி பகுதியை சேர்ந்தவர் மீராஜ் ஆலோம். இவர் ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்து டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்று வருகிறார். இவருடைய மனைவி நாசினி காத்தூன். இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர்.
இந்த நிலையில், சம்பவத்தன்று இவர்களுடைய 2-வது மகன் தவுகீர் (வயது 3) வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை தவறி விழுந்து விட்டான்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி தவுகீர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.