ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 813 பேருக்கு கொரோனா

இன்று மட்டும் 1,017 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-02 17:45 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. நேற்று 4 ஆயிரத்து 502 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 924 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த நிலையில் இன்று புதிதாக 813 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 681 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 550 பேர் குணமடைந்தனர். இன்று மட்டும் 1,017 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 8 ஆயிரத்து 406 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 725 பேர் பலியாகி உள்ளனர்.

Tags:    

Similar News