அந்தியூர் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட 73 பேர் வேட்புமனு தாக்கல்

அந்தியூர் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட 73 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2022-02-04 14:30 GMT

பைல் படம்.

அந்தியூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் போட்டியிட மொத்தம் 73 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழக அரசு சார்பில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் ஜன 28 முதல் பெறப்பட்டன. வேட்புமனு தாக்கல் இறுதி நாளான இன்று அந்தியூர் பேரூராட்சி பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அந்தியூர் பேரூராட்சியில் 1வது வார்டில் 2 பேரும்,2வது வார்டில் 4 பேரும் , 3வது வார்டில் 3 பேரும் , 4வது வார்டில் 3 பேரும் , 5வது வார்டில் 5 பேரும், 6வது வார்டில் 4 பேரும் , 7 வது வார்டில் 7 பேரும் , 8வது வார்டில் 4 பேரும் , 9வது வார்டில் 2 பேரும் , 10வது வார்டில் 3 பேரும் , 11வது வார்டில் 6 பேரும் , 12வது வார்டில் 6 பேரும், 13வது வார்டில் 2 பேரும் , 14வது வார்டில் 3 பேரும் , 15வது வார்டில் 2 பேரும், 16வது வார்டில் 5 பேரும், 17வது வார்டில் 4 பேரும் மற்றும் 18வது வார்டில் 8 பேரும் என மொத்தம் 73 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News