பர்கூர் வனப்பகுதியில் 7 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் விற்பனைக்காக கடத்த முயன்ற 7 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2023-07-15 02:15 GMT
பர்கூர் வனப்பகுதியில் 7 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட 7 கிலோ சந்தன மரக்கட்டைகள்.
  • whatsapp icon

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி தட்டகரை வனச்சரகத்துக்குட்பட்ட போதமலை வனப்பகுதியில் உள்ள சீப்பநெட்டி ஓடை பகுதியில் வனத்துறையினர் நேற்று (14-ம் தேதி) ரோந்து சென்றனர். அப்போது அங்கு 3 பேர் கையில் சாக்கு மூட்டையுடன் வந்து கொண்டு இருந்தனர். வனத்துறையினரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் பிடிப்பட்டவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் பர்கூர் மலைப்பகுதி மின்தாங்கி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன் (வயது 55), விராலிக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (34) மற்றும் ஆனந்தன் (21) என்பதும், அவர்கள் 3 பேரும் வனப்பகுதியில் சந்தன மரத்தை வெட்டி சந்தனக் கட்டைகளாக ஆக்கி சாக்கு மூட்டைகளில் கட்டி வைத்து விற்பனைக்காக கொண்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து வனத்துறையினர்  3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 7 கிலோ சந்தன மரக்கட்டைகள், அரிவாள் போன்றவற்றையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News