ஈரோடு மாவட்டத்தில் 13-வது கட்ட முகாமில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 13-வது கட்ட முகாம் இன்று நடைபெற்றது. இதில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-12-04 15:00 GMT

பைல் படம்.

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய அனைவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 12 கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிவடைந்து உள்ளது. இந்நிலையில் 13-வது கட்ட தடுப்பூசி முகாம் இன்று (சனிக்கிழமை) நடந்தது. 

ஈரோடு மாவட்டம் முழுவதும் 467 மையங்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடந்தது. ஈரோடு மாநகர பொறுத்தவரை 50 இடங்களிலும், நடமாடும் வாகனம் மூலம் தடுப்பூசி போடும் பணி நடந்தது. இன்று நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் மாவட்டம் முழுவதும் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News