ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 4 பேருக்கு கொரோனா தாெற்று பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் தற்போது 85 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-03-06 14:00 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று வேறும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,641 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 23 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்காரணமாக கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 1,31,822 பேர் குணமடைந்துள்ளனர். புதி தாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் மொத்தம் 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 734 பேர் பலியாகி உள்ளனர்.

Tags:    

Similar News