ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 29,046 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடந்த 34-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 29,046 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2022-08-22 13:30 GMT

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை நகராட்சி தலைவர் நாகராஜ் பார்வையிட்டார்.

ஈரோடு மாவட்டம், முழுவதும் நேற்று மொத்தம் 1,597 மையங்களில் 34-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இடைவிடாமல் நடந்தது. முகாமில் முதல் தவணை தடுப்பூசியை 1,041 பேரும், 2வது தவணை தடுப்பூசியை 16,361 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 11,644 பேரும் என மொத்தம் 29,046 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Tags:    

Similar News